மதிலையும், வாழை மரங்களையும் ப தம் பார்த்த யானைகள் !

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை பகுதியில்  இன்று( 12 )அதிகாலை காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு  வருகை தந்து சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக சாய்ந்தமருது வொலிவோரியன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது- கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து நாசப்படுத்தியதுடன், அங்கிருந்த மரக்கன்றுகளையும், .
சேதப்படுத்தியுள்ளடன் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அருகில் உள்ள வீடொன்றின் மதிலை உடைத்து அங்கு நடப்பட்டிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
 அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளுக்கு காட்டுயானைகள் கூட்டமாக அண்மை காலமாக
வருகை தந்த வண்ணம் உள்ளன.இதன் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.