வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 31 மாணவர்கள் சித்தி !

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில்; 119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 113 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 31 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில் இதற்காக கற்பித்த ஆசிரியர்களான எஸ்.நாகராசா, திருமதி.எல்.பரமானந்தராஜா, திருமதி.ஜே.அனுராஜ் ஆகியோர்களுக்கும், மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

அத்தோடு 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பாடசாலையில் 190 புள்ளி அதிகூடிய புள்ளியாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ந.குகதர்சன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.