பச்சையாக மீனை சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சி, மீனை பச்சையாக உட்கொண்ட சம்பவம் கொழும்பில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.

 

இன்று (17)செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை உட்கொண்டு காண்பித்தார்மீன்களை உட்கொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவலாம் என்கிற அச்சம் மக்களிடையே பரலவாக ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மக்கள் மத்தியிலுள்ள இந்த அச்ச உணர்வை அகற்ற முன்னாள் அமைச்சர் திலிப்கொழும்பில்  ஊடக சந்திப்பை   நடத்தி, அந்த ஊடக சந்திப்பிலேயே சமைக்காத பச்சை மீனை உட்கொண்டுகாட்டினார்.இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவது அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் கடமை என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.