349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை