கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது

இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 1 வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்கள சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்கள சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்கள சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்கள சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு பகுதி சேதம் அடைந்துள்ளது.

பாதிப்பு ஏற்பட்ட பருக்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.