திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாளை…

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்
ஏற்கனவே திட்டமிட்டதன்படி நாளை(4) காலை 10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளஅறிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள் ,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.