காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று  சடலமாக மீட்கப்படடுள்ளார்.
காத்தான்குடிக் கடலில் நேற்று (4) மதியம் நீராடிய இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில்  மூன்று இளைஞர்கள்  நீராடச் சென்றதாவும் அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
ஏனைய இரண்டு இளைஞர்களை  மீட்டிருந்த நிலையில் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில்  வசிக்கும் 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையில் இஸ்தலத்திற்கு விரைந்த  காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரனைகளை  மேற்கொண்டுவந்தநிலையில்,
குறித்த இளைஞனை தேடும் பணியினை நேற்றைய தினத்திலிருந்து அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்றைய தினம்  பூநெச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீரற்ற கால நிலையினால் குறித்த கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.