திருகோணமலை-மீனவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்…

திருகோணமலையிலிருந்து மிதுல  புதா என்ற டெங்கி படகில் ஆழ் கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று (05) திருகோணமலை கொட்பே  பகுதிக்குகொண்டு வந்துள்ளனர்.

கடந்த 11ம்மாதம் 21ம் திகதி ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும் இம் மாதம் 2ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டேகொட-உடதெனிய ,
ரக்லிய பகுதியைச் சேர்ந்த எம்.எம்.எஸ். இரோஷன் (வயது 31) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவர் மரணித்தமை தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.