முனீஸ்வரன் வீதி புரெவி புயல் வெள்ளப்பாதிப்புக்களை நேரில் சென்று ஆராய்ந்தார் ஆனல்ட்…
புரெவி புயல் அசாதாரண நிலைமைகள் காரணமாக யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் இன்று (5) நேரடிக் கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தார்.
குறித்த வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள், வடிகால் ஒழுங்கமைப்புக்கள் குறித்து முதல்வர் ஆராய்ந்தார்.
அப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் முதல்வருடன் கலந்துரையாடினர். முதல்வரும் வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தெளிவுகளை வழங்கினார்.
முதல்வரின் இவ் விஜயத்தில் யாழ் மாநகர பிரதி முதல்வர் கௌரவ து.ஈசன் அவர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை