கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு

உரும்பிராய் பிரதேச சபை முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே கெரோனா தொற்றாளரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்தார்.
இந் நிலையில் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.