அறநெறி பாடசாலைகள் திறக்க அனுமதி
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அனைத்து அறநெறி பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை