மாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து! அரசுக்கு சஜித் எச்சரிக்கை

“இலங்கையின் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யாது அதனை தற்போது உள்ளவாறே பேண வேண்டும். இதை மீறி மாகாண சபை முறைமையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் பாரிய விளைவுகளை நாடு சந்திக்க வேண்டிவரும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாங்கள் 13 ஆவது திருத்தத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உயர்நீதிமன்றமே கூறியுள்ளது.

இதனால் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யக் கூடாது. அது தற்போது உள்ளவாறே பேணப்பட வேண்டும் என்பதே எமது கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது.

இதன்படி மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அதனைப் பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கக்கூடாது.

இதையும் மீறி மாகாண சபை முறைமையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் பாரிய விளைவுகளை நாடு சந்திக்க வேண்டிவரும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.