யாழ்-அளவெட்டியில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அளவெட்டி பத்துபனையடி கிராமத்தில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டட வேலையில் ஈடுட்டிருந்த போது நேற்று (24) மாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அளவெட்டி மேற்கு முருங்கயப்புலத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.