மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு போராட்டம்!

கோறளைப்பற்று வாழைச்சேசேனை பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து  எதிர்தரப்பினரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா, அதிகாரிகளும் ஊழல் வாதிகளா, ஆளுநரே வர்த்தமானி வெளியீடு விளையாட்டு படகா, கிழக்கின் நிர்வாகம் யார் கையில் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது எதிர்ப்பு கோஷங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எதிரானதாகவும் இருந்தது.
கிழக்கில் உள்ள 10 உள்ளுராட்சி சபைகளின்  2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான குழப்ப நிலையை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறவில்லை. சபையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசாரணையொன்றை மேற்கொள்ளும் முகமாக   கிழக்கு மாகாண ஆளுநரின் 08.01.2021 ஆம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவித்தலின்படி தவிசாளர்களின் பதவி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு உப தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவ் வர்த்தமானியை இடை நிறுத்திபதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் 27.01.2021 ஆம் திகதி புதன் கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 9 சபைகளுக்கே இவ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் உள்ளன.
 கோறளைப்பற்று பிரதேச சபை மாத்திரம் இவ்வறிவித்தலில் உள்வாங்கப்படவில்லையென்பது எதிர்தரப்பினரின் ஆதங்கமாகும்.
அதாவது 9 சபைகளுக்கும் தவிசாளர் தெரிவிற்கான வாய்ப்புள்ளதாகவும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இவ் நடைமுறை பின்பற்றப்படவில்லையென்பதும் ஒரு குறைபாடகவுள்ளது எனவே 2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதாகவே கருதி இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளிடப்பட்டுள்ளது  அதனை கண்டித்து தாம் நீதிமன்றம் செல்வதுடன் தொடர்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.