வத்தளை ஆலயமொன்றில்- தீப்பரவல்

வத்தளை- ஹேகித்த பகுதியிலுள்ள ஆலயமொன்றில் திடீர் தீப்பரவல், இன்று (06) காலை 9.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் இரண்டாவது மாடியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்பாடத நிலையில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.