கொரோனா- மேலும் 807பேர் பூரணமாக குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 807பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 63,401 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை