வடக்கில் 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர்,

வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுடன் கலந்துரையாடி மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை,

30 தொடக்கம் 60 வரையானோருக்கு தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்படும். அவர்கள் குறித்த பெயர் விபரங்கள் பிரதேச செயலர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்களே ஒழுங்குபடுத்தி அழைத்துவருவர் என்றும் வடக்கில் தடுப்பூசி போடுவதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.