இலஞ்ச ஊழல் நடவடிக்கையை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் போன்ற அரச நிறுவனங்களில் இலஞ்சம் பெறுபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் கொழும்பைச் சூழவுள்ள அரச நிறுவனங்களில் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.