அழுத்தங்களை காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை – இராதாகிருஷ்ணன் (எம்.பி)

(க.கிஷாந்தன்)

 

அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள்( 19.02.2021 )அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அட்டனில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…

 

“சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம். பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே நான் கருதுகின்றேன். நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.

 

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார்.

 

“அரவிந்த குமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு அவருடைய பதிலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து மீள பரிசீலனை செய்து முடிவூ எடுக்கப்படும். இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகள் 20 ஐ ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. ஆகவே அது தொடர்பில் பேசாது மலையக மக்கள் முன்னணியின் உள்விவகாரத்தில் மாத்திரம் தலையிடுவது எந்த வகையில் நியாயம்? போத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் என்பது ஜனநாயக போராட்டமாகும். ஆனால் தற்போது அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை வசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும். ஆமைச்சர் விமல் வீரவங்க அரசாங்கத்திற்கு உள்ளேயே இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு நடகமாகும். மேலும் இந்தியாவை பகைத்துக் கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது. ஆகவே நண்பனை பகைத்துக்கொண்டு செயற்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றார்.

Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.