யாழில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலானபோராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைந்துகொண்டனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இணைந்துகொண்டுள்ள நிலையில், இன்றையதினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் எனக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.