சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை இல்லை

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.