மக்கள் எனது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் – நாமல் ராஜபக்ச

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் இருக்கிறதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல், குடும்ப அரசியலை தாம் விமர்சிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் தங்கள் நாட்டில் குடும்ப அரசியல் உண்மையில் செயற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலில் கிரண் ராய் நாமல் ராஜபக்ஷவுடன் அரசியல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

பிரித்தானியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ஷ இதன்போது கலந்துரையாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.