உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் எவ்வித தகவல்களும் தனக்கு அறிவிக்கப்பட வில்லை -முன்னாள் ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் எவ்வித தகவல்களும் தனக்கு அறிவிக்கப்பட வில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை ஊடக அது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பாரிய தாக்குதல் இடம்பெற்ற மறுநாளே எனது அரசாங்கத்தின் அமைச்சர்களே என் மீது தாக்குதல்களை ஆரம்பித்து விட்டனர். அனைத்து இடங்களிலும் என்னை மாத்திரமே இலக்காக கொண்டிருந்தனர். நான் இந்த தகவல்களை அறிந்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று. இது தொடர்பில் எந்த தகவல்களும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறான தகவல்கள் கிடைத்து அதனை புறக்கணிக்கும் அளவிற்கு நான் கொடூரமானவன் இல்லை. இந்த தகவல்களை எனக்கு அறிவித்திருந்தால் இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற நான் இடமளித்திருக்க மாட்டேன். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.