ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அல்லது 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.