அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளர்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டுவந்த நாலக கலுவெவ கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

நாலக கலுவெவ தனது தனிப்பட்ட காரணம் தொடர்பில் இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.