கெளரவ ஜனாதிபதி,பிரதமர் வழிகாட்டலில் சர்வமத பிராத்தனை அனைத்து மதத் தலங்களில்…

கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழிகாட்டலில் புத்த சாசன அமைச்சர் கெளரவ பிரதமர் மகிந்த ராசபக்ச ஏற்பாட்டில் சர்வமத பிராத்தனை (08/05/2021) இன்று மாலை 5.46 மணியளவில் அனைத்து மதத் தலங்களில் இடம்பெறவுள்ளது. ஆலயங்களுக்கு சென்று இன் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு மாலை 5.46 மணியளவில் தீபங்களை ஏற்றி இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அனைத்து மக்களும் விடுபடவேண்டும் என வழிபாடுகளில் ஈடுபடுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தல்  வழங்கப்பட்டிருந்தது  அந்தவகையில் இன்றைய தினம் மாலை 5.46 மணியளவில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.