இளம் மனைவி அடித்து கொலை செய்த கணவன்… வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து இரும்பு கம்பியால் தாக்குதல்!

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குடும்ப பிரச்சினை தொடர்பான வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து இரும்பு கம்பியால் கணவன்,
மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

மஹரகம , பமுனுவ வீதி பிரதேசத்தில் நேற்று இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இளம் வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது வரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.