கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின்போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.