நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சியே காரணம் என இங்கு உரையாற்றியவர்களில் பலர் சுட்டிக்காட்ட முற்பட்டனர்.

நல்லாட்சியின் தலைவர் நான்தான். தற்போது இந்த அரசுடன் இருக்கின்றேன். மேற்படி கருத்து தவறானது.

நல்லாட்சி மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசுகளும் காரணம். சுமார் 40 ஆண்டுகளாக இப்பிரச்சினை நீடிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.