முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தால் சாதனை மாணவனுக்கு உதவி

கிளிநொச்சியில் கழிவுப்பொருட்களை கொண்டு கார் ஒன்றினை தயாரித்த மாணவனுக்கு முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வாரம் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த ரொசான் என்ற மாணவன் நால்வர் பயணிக்க கூடிய கார் ஒன்றினை அண்மையில் தயாரித்திருந்தார். குடும்ப வறுமையிலும் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,217 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,217 மில்லியனாக அதிகரித்துள்ளது. சோமாவதி ரஜமகா விகாராதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக தேரர் 500000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்புச் ...

மேலும்..

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 291 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம்

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தள்ளனர். ஒவ்வொரு வருடமும் டெங்கு ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று

பொதுத் தேர்தல்  திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது. தேர்தல் தினத்தை சவாலுக்கு ...

மேலும்..

சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

பாதாள தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் இந்தோனேசியா, பெரலஸ் ...

மேலும்..

அதிகாரத்தில் இருக்கின்ற எவருமே கொரோனா சட்டத்தை மீறமுடியாது சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடித்துரைப்பு

"கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமே அதனை மீற முடியாது." - இவ்வாறு சுகாதார ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி!- புலிகளுடனான போர் குறித்து பொன்சேகா கருத்து

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு - கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு - கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார்." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ ...

மேலும்..

கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு!- 811 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 02 ...

மேலும்..

பொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 20 குடும்பங்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை ஊரெழு கிராமத்தைச் சேர்ந்த தற்போது ...

மேலும்..

கொரோனா வைரஸ் சோதனை இலக்கை பிரித்தானியா வெற்றிகரமாக கடந்துள்ளது!

கொரோனா வைரஸ் சோதனை திறனை மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 200,000ஆக உயர்த்துவதற்கான இலக்கை பிரித்தானியா கடந்துள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சுமார் 205,634 சோதனைகள் இடம்பெற்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இதை ‘வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் எங்கள் ...

மேலும்..

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி மத்திய லண்டனிலும் போராட்டம்: ஐந்து பேர் கைது!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, மத்திய லண்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ (ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதி வேண்டும்) என்று கோஷம் எழுப்பியவாறு நேற்று ...

மேலும்..

கொவிட்-19 சோதனை- தடமறிதல் சேவை வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது!

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த உதவும் வகையில் கொவிட்-19 சோதனை மற்றும் தடமறிதல் சேவை, வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) இந்த சேவை நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சர் வாகன் கெதிங் (Vaughan Gething) தெரிவித்துள்ளார். அறிவியல் ஆலோசனையின்படி இந்த முடிவினை எடுப்பதில் பெருமிதம் ...

மேலும்..

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீமேன் (Jeane Freeman) தெரிவித்துள்ளார். முடக்கநிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதால், நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு தயாராக இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பகுதியாக இது அமையுமென அவர் மேலும் ...

மேலும்..