மேல் மாகாணத்தில் இருந்து மேலும் 3000 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 2,000 பேர் பிலியந்தலவில் ...

மேலும்..

அம்பாறையில் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பு நிலையுமே இதற்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் ...

மேலும்..

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல்; 8,170 பேருக்கு எதிராக அபராதம்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, ...

மேலும்..

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மீது அரசாங்கம் வரி சுமைகளைத் திணிக்கிறது – வேலுகுமார்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கம், அவர்கள் மீது வரி சுமைகளைத் திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 1,347 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர், ...

மேலும்..

நாடு முழுவதும் 4,649 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் – இராணுவத் தளபதி

நாடு முழுவதும் உள்ள 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,649 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த 31 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி ...

மேலும்..

200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனியார் துறையில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தனியார் துறையின் ஊழியர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தை அமைச்சரவையில் ...

மேலும்..

ஊரடங்கு தளர்வு – சுகாதார கட்டுப்பாடுகளுடன் வழமைக்கு திரும்பும் மக்கள்

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களின் நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதேநேரம் சுமார் 60இற்கும் மேற்பட்ட நாட்களுக்கு பின்னர் கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ...

மேலும்..

அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் – அனில் ஜாசிங்க கோரிக்கை

தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அரச தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக ...

மேலும்..

2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த ...

மேலும்..

மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு சுகாதாரப் பொருட்கள் நன்கொடை

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரிலுள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு பல சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தேவையான சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் ...

மேலும்..

கட்டாரில் சிக்கியுள்ளவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்

கட்டாரில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்று(திங்கட்கிழமை) அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு ...

மேலும்..

உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிப்பு!

அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சீனி, பருப்பு, கிழங்கு, உலர்ந்த மிளகாய், டின்மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக ...

மேலும்..