சிறப்புச் செய்திகள்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிற்ஸர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு  இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் ...

மேலும்..

சீனாவின் வியாபாரம் வடக்கிலும் ஆரம்பம்!

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் ...

மேலும்..

பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்!

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் ...

மேலும்..

மீன்களின் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிரடித் தீர்மானம்!

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ...

மேலும்..

மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு கல்வி வலயத்திற்க்குட்பட்ட மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வின் பாடசாலையின் முதல்வர் கியூமர்பயஸ் அவர்களின் தலைமைநடைபெற்றது இந் நிகழ்வின் வரவேற்புரையினை இணை சைவ சமய ஆசிரியை வளர்மதி ஆற்றியதை தொடர்ந்து கலை நிகழ்வு நடை பெற்றது தொடர்ந்து நவராத்திரி தொடர்பான கருத்துரையினை தமிழ் பாட ஆசிரியர் ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அதிரடித் தீர்மானம்!

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக ” போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று” ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடற்படை, பொலிஸ் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் ...

மேலும்..

தபாலில் பறிமாறப்படும் போதைப்பொருள்?

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதைப்பொருள் பொதியை எடுத்து செல்வதற்காக வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதி ஒன்றை ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பு: தியாகி அறக்கொடை நிறுவுநர் நிதியுதவி!

ஒரே பிரசவத்தில்  ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு  நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை ...

மேலும்..

காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் தொடர்பில் மததலைவர்களிடம் பலஸ்தீன தூதர் கண்ணீர் மல்க விவரிப்பு!

பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்றுகூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். ஹமாஸ் ...

மேலும்..

சுகாதாரத்துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு பொறுப்புள்ளதாம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது

சாதாரண மக்களுக்கு சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். சுகாதார துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புள்ளது. கட்டாயமாக ஜனாதிபதியின் தலையீடு இதற்கு அவசியமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். சுகாதார ...

மேலும்..

ரூ.23 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருள்கள் புத்தகங்களில்!

08 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்குக் கொண்டு வந்த இந்தோனேசியப் பெண்ணொருவர் நேற்று (22ஆம் திகதி) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு ...

மேலும்..

அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான  பிரேமசிறி ஹேவாவசம்  திடீர் சுகவீனம் காரணமான தனது 64 ஆவது வயதில்  திங்கட்கிழமை காலமானார். இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய பங்கு வகித்த பிரேமசிறி நாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ரவிராஜ் எம்.பியை கொலைசெய்தவர் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்! மனோ கணேசன் எச்சரிக்கை

'முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு - ஈஸ்டர் ஞாயிறு ...

மேலும்..

யுத்தகால ஊடகவியலாளர்களுக்கு முல்லைத்தீவில் கௌரவம் அளிப்பு!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடக அமையம் கடந்த 2021 ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ...

மேலும்..

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கிளி. மாவட்ட செயலகம் உதவி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது உற்பத்திகளைச்  சந்தைப்படுத்த முடியாமல் தவித்துவந்த உற்பத்தியாளர்களுக்கு, ...

மேலும்..