இலங்கை செய்திகள்

மக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க இரவு நேரங்களில் ஊரடங்கு தொடரும்

நாடுமுழுவதும் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணிமுதல் அதிகாலை 04 மணி வரையான ஊரடங்கு உத்தரவு இந்த வாரமும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக இந்த வாரம், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாது என ஆங்கில ஊடகம் ...

மேலும்..

12 மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நடத்த தீர்மானம்

பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி தேர்தல் ஒத்திகை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் நோக்கில், இந்த ஒத்திகை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால் பொதுத்தேர்தலில் தோல்வியையே சந்திக்க நேரிடும்- ரணில்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால், பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்விதான் கிடைக்கும் என அந்தக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். ...

மேலும்..

வவுனியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நோக்கி பயணித்த கார், அதிகாலை 1 மணியளவில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதிகரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ...

மேலும்..

மதத் தலைவர்களுடன் கலந்துரையாட பிரதமர் தீர்மானம்..!

மத ஸ்தலங்களில் வழிபாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதால் மக்கள் மீண்டும் ...

மேலும்..

அமெரிக்க, சீன தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை

கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று(செவ்வாய்கிழமை) அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்தநிலையிலேயே இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

நாயை கடத்தி கப்பம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு வயோதிப ...

மேலும்..

வவுனியாவில் இளைஞர் ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா,  உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் காலை, வவுனியா பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

மேலும்..

வவுனியாவில் கைகலப்பு : தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சிகிச்சை : பெண் ஒருவர் கைது

வவுனியா – றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பெண்ணுக்கும் அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக  வவுனியா ...

மேலும்..

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் பங்கேற்றார் இராணுவ தளபதி

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார். வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்தது. நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய ...

மேலும்..

கிளிநொச்சி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியியின் பூநகரி 4ம் கட்டை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து மணல் ...

மேலும்..

தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் – கோட்டா

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருந்துகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால பிரச்சினையை விரிவாக ஆராய்ந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண ...

மேலும்..

தமிழ் மக்களிடம் மஹிந்தவுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை – சுப்பிரமணியம் சுவாமி

தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என இந்தியப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை வானொலியொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எச்சரிக்கை நிலவிய ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ...

மேலும்..