இலங்கை செய்திகள்

அஸ்வெசும நலன் உதவி திட்டத்துடன் இணைந்த வகையில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

  நூருல் ஹூதா உமர். 'அஸ்வெசும ' நலன் உதவி திட்டத்துடன் இணைந்த வகையில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தொடர்பான பயிற்சி நெறி அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களில் தமிழ் மொழியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு திங்கட்கிழமை அக்கரைப்பற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி ...

மேலும்..

முன்னாள் எம்.பி. அலவியின் மறைவுக்கு ரிஷாத் அனுதாபம்!

  குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அலவியின் மறைவு தனக்கு மிகவும் வேதனை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு ...

மேலும்..

அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்தது!

அபு அலா - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு ...

மேலும்..

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி..T

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து ...

மேலும்..

கோட்டாபயவின் வழியில் ரணிலாலும் கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிப்பு! இம்ரான் எம்.பி. குற்றச்சாட்டு

  ஹூஸ்பர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார். என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு - இலங்கையில் கிழக்கு ...

மேலும்..

நாட்டில் ஊடக அடக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன ஜனநாயக சீர்குலைவுக்கு அரச இயந்திரங்களும் பங்காளிகள் ஊடகவியலாளர் சரவணன் வேதளை

  இந்த நாட்டில் ஊடகஅடக்குமுறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு, இங்கு ஜனநாயகச் சீர்குலைவு தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய அரச இயந்திரங்களான பொலிஸ், இராணுவத்தினர்கூட, ஊடக அடக்குமுறைச் செயற்பாட்டில் ஈடுபட்டு இந்த நாட்டின் ஜனநாயக ...

மேலும்..

சாய்ந்தமருது முன்பள்ளிகளுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டன

  நூருல் ஹூதா உமர் உலகவங்கியின் நிதியுதவியில் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகவலுப்படுத்துகை அமைச்சால் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 04 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளவாடங்கள் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, ...

மேலும்..

காத்தான்குடி பெண்கள் காப்பகத்துக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்!

  நூருல் ஹூதா உமர் காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவரும் முன்னாள் காத்தானக்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்தார். இந்தப் பெண்கள் காப்பகம் ...

மேலும்..

உத்தியோகத்தர்கள் பாராட்டி கௌரவிப்பு

  நூருல் ஹூதா உமர் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அடைவைப் பெற்றுக் கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுகளில் வழிநடத்திய கிளைகளின் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு செய்த ...

மேலும்..

அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார். மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ...

மேலும்..

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாண நூலகத்திற்கு வருகை..T

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர   ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.   குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சி ல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி..T

வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ...

மேலும்..

தாமரைப் பூ பறிக்கச்சென்ற இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - தாமரைக்குளம் ஏரியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரண்டு இளைஞர்கள் படகில் பயணித்த நிலையில், படகில் இருந்த ஓட்டையுடாக நீர் கசிந்து படகு மூழ்கிய நிலையில், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்த ...

மேலும்..

துருக்கியில் தடையான பயங்கரவாத அமைப்பு இலங்கையில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாம்! துருக்கி தூதுவர் கூறுகின்றார்

துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என இலங்கைக்கான துருக்கி தூதுவர் டெமெட் செகெர்சியோ குளு தெரிவித்துள்ளார். 2016 சதிப்புரட்சிக்கு காரணமான ஃபெத்துல்லாஹிஸ்ட் என்ற அமைப்பே இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த பயங்கரவாத ...

மேலும்..

பிரதமர் தினேஷை சந்தித்தார் புதிய விமானப்படைத் தளபதி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சம்பிரதாயப்படி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார். எயார் மார்ஷல் உதேனி ...

மேலும்..