July 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) இடைக்கிடையே மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதாவது வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ...

மேலும்..

முகக்கவசம் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்புகள்!

முகக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியே வகுப்புகளை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய முக்கவசங்கள் இன்றி பயணிக்கும் மற்றும் முகக்கவசங்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண ...

மேலும்..

பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க தயாரில்லை – மஹிந்த திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெல்லவாய பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

நுகேகொட விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

நுகேகொட பகுதியில்  இராணுவத்தின் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ  வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 2 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று வாய்ப்பு!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை  தவறவிட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதற்கமைய, இன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது தேர்தல் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் தபால்மூல ...

மேலும்..

பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து இன்று அறிவிப்பு!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவித்தல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ...

மேலும்..

மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 20 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் ...

மேலும்..

தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தது தமிழ் மக்கள் பேரவை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் ...

மேலும்..

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மூவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

தனியார் பேருந்து சேவைகளை 50 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை!

தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய இந்த திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். குறைந்தளவு மக்களே பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினை ஐ.தே.க.வுக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே- சந்திரசேன

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினை, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு

தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக அதன் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ...

மேலும்..

கொரோனா அச்சம் – பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ...

மேலும்..

இராணுவச் சிப்பாய் மீது வேகமாக வந்து மோதிய மோட்டார் சைக்கிள்- யாழில் சம்பவம்!

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் ...

மேலும்..

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்- துரைராஜசிங்கம்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். ‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதில் எவ்வித முரண்பாடோ தடையோ கிடையாது’ என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர் மேற்படி ...

மேலும்..

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒருதுண்டு காணியைக்கூட மீட்க முடியுமா-கலையரசன் கேள்வி

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

மேலும்..

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது- ஜனநாயகப் போராளிகள் கட்சி

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்

தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே ...

மேலும்..

பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறு கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

‘ஜெட்’ வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த ...

மேலும்..

கந்தகாடு விவகாரம்: வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த முதலாவது ஆலோசகர் குணமடைந்தார்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது ஆலோசகர், பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். ஹபராதுவை- ஹினட்டிகல  பகுதியைச் சேர்ந்த இவருக்கு  பொரளை ஐ.டி.எச்.இல்  சிகிச்சைப்  வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூரண ...

மேலும்..

காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை – விஜயதாச

புலம்பெயர் தமிழர்களும் வெளிநாடுகளும் விரும்பிய விதத்திலேயே காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டதேயன்றி, தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளில் போட்டியிடும் மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு – கல்லடியில் அமைந்துள்ள ‘வொய்ஸ் ஒவ் மீடியா’ ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுக்களான நிலையத்தில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 708ஆக பதிவு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 4 பேரில் இந்தியாவிலிருந்து வந்த இருவரும் ...

மேலும்..

ஜனநாயநீரோட்டத்துக்கு வரும் போராளிகள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படவேண்டும்! தமிழரசு செயலர் துரைராஜசிங்கம்

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

புலி ஆண்ட இந்த மண்ணை கூட்டமைப்பே ஆளவேண்டும்! ஜனநாயகப் போராளிகள்

தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும். புலி ஆட்சி செய்த இந்த மண்ணிலே வேறு எதுவும் ஆட்சி செய்ய முடியாது ...

மேலும்..

சம்பந்தனை விலைக்கு வாங்கமுடியாததால் கூட்டமைப்பை சிதைக்கிறது சிங்களதேசம்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர்

ன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று (18) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையிலும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ...

மேலும்..