ஹொரவ்பொத்தான- துடுவெவ பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா உறுதி!

ஹொரவ்பொத்தான -துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அசேல திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு-மோதர இராணுவ முகாமில் கடமையாற்றிய வந்த இவர் விடுமுறைக்காக கடந்த 9ஆம் திகதி வீட்டுக்கு வருகை தந்ததாகவும், இதனையடுத்து 10 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை  மேற் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்-இவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.