மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம்- அசேல குணவர்தன

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்றமை, வர்த்தக நிலையங்களுக்குள் கூடியிருந்தமை என்பவற்றைப் பார்க்கையில், கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, புத்தாண்டை மிகவும் சுகாதார பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கான ஆலோசனை​கள் அடங்கிய வழிகாட்டல்களை இன்று வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், குழுக்களாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் தவிர்த்து, தனியாக விளையாடும் விளையாட்டுகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.