சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனை வடமாகாண செயலர் எஸ்.எம். சமன்பந்துலசேன திறந்து வைத்தார்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக தென்மராட்சி அபிபிருத்தி கழக(uk) தலைவர் வைத்திய கலாநிதி திரு ஆ.புவிநாதன் அவர்களும்  தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் தலைவரும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் போஷகருமான பேராசிரியர் திரு. க.கந்தசாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.