மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி

மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் சுயாதீன குழுக்களாக மாறி என்ன அரசியல் கருத்துக்கள் கூறினாலும், மொட்டு கட்சி பிளவுபட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, நாவலப்பிட்டி, புத்தளம் பிரதேசங்களில் பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டங்களில் இருந்து இது சமூகத்திற்குத் தெளிவாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் மொட்டு கட்சி மக்கள் பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.