வவுனியாவில் 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை  இருபது  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் தொடர்பில் சிறியளவிலான முறைப்பாடுகளே இதுவரை பதிவாகியுள்ளது.அந்தவகையில் கடந்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து இன்று மாலைவரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.அத்துடன் தபால் மூலமான வாக்களிப்பு இன்றுடன் இரண்டாவது நாட்களாக தொடர்ந்துவருகின்றது.இன்றயதினம் மதியம் 12 மணிவரை 50 வீதமான தபால்வாக்குகள் பதிவாகியுள்ளதாக”  என தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5132 தபால்வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196,விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால் மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.