யாழ். மாவட்ட வேட்பாளர் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களோடு அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சேர்ந்து அணி திரளத் தொடங்கியுள்ளனர்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களோடு அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சேர்ந்து அணி திரளத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வணிக பீடாதிபதி பேராசிரியர். தேவராசா அவர்கள் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களோடு இணைந்து, வீடு வீடாக மக்களிடம் நேரடியாக சென்று, வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பயணித்து வரும் தீர்வு சம்பந்தமான பயணத்தோடு தற்சார்பு பொருளாதாரம் ஒன்றையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கொள்கை திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கல்விமான்களும் புத்திஜீவிகளும் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களை அண்மைக்காலமாக ஆதரிக்க தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களான பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் அவரை ஆதரிப்பது தமிழ் சமூகத்திற்கு நல்ல ஒரு ஆரோக்கியமான விடயமாக கருதப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை