எரிபொருள் ரயிலுடன் மோதியது லொறி; மட்டக்களப்பைச் சேர்ந்த சாரதி உயிரிழப்பு…
ரயிலும் லொறியும் மோதி இடம்பெற்ற விபத்தில், குறித்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுல்ல ரயில் கடவையில் நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில், நுழைவாயிலுக்கு வலது பக்கமாகச் சென்ற லொறியானது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை