ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் அதிகூடிய 192 புள்ளிகளைப் பெற்று வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவி சஹா சாதனை.

வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி முகம்மது சமீம் ஆயிஷா சஹா 192 புள்ளிகளைப் பெற்று  ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த பாடசாலையில் இம்முறை 54 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி 13 மாணவிகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும், 27 மாணவிகள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும், 11 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்தாகவும் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

ஓட்டமாவடிக் கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்த மாணவி ஆயிஷா சஹாவுக்கும்,  கற்பித்த ஆசிரியர் ஐ.சபீக், மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்கள், ஆலோசனைகளை வழங்கிய கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.