கொரோனா -கடந்த 24 மணித்தியாலங்களில் 346 பேர்  குணமடைந்துள்ளனர். 

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 346 பேர் கடந்த 24மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் Brandix ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்றையதினம் (28) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 487 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 223 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 78 பேரும்கண்டி மாவட்டத்தில் 15 பேரும் அடையாளம்).

இன்று (29) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,501 இலிருந்து 22,988 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,656 இலிருந்து 17,002 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 487 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 00 பேர் (00) ஆகிய 487 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (29) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 346 பேர் குணமடைந்துள்ளனர இது வரை நாட்டில்கொரோனா வைரஸ் காரணமாக 109  பேர் மரணமடைந்துள்ளனர்.

 

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 531 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.