மட்டக்களப்பில் 345 பேருக்கு 168 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தினால் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (06) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு காசோலைகளை வழங்கிவைத்தனர்.
இதன்போது கடந்த காலங்களில் இன்னல்களுக்குள்ளான 345 நபர்களுக்காக 168 இலட்சம் ரூபாய் இதன் போது காசோலைகளாக வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட 36 ஆலயங்களிற்கும், கடன்பாதிப்பிற்குள்ளான 26 நபர்களுக்கும் மேலும் சொத்துப் பாதிப்பிற்குள்ளான 280 நபர்களுக்கும் நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் திருமதி.மங்களேஸ்வரி சங்கர்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் இக் கொடுப்பனவை வழங்கியமைக்காக அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.