ஆலையடிவேம்பு கண்ணகிபுர கிராம வாழ்மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு பியசேன கிருத்திகனின் முயற்சியில் விரைவில் தீர்வு
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கண்ணகிபுர கிராம வாழ்மக்களின் அத்தியாவசிய தேவையான சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக நீர் வழங்கல் அமைச்சின் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் அவர்கள் நீர் வழங்கல் அமைச்சர்வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் சரத் ரணசிங்க ஆகியோருடன் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் அமைச்சில் இன்று இடம்பெற்றது
இதன் போது குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மிக விரைவில் கண்ணகி கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதாக உறுதியளித்தார்.
கருத்துக்களேதுமில்லை