பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சாவுடன் கைது!

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இந்தக் கைது நடவடிக்கையை இன்று வியாழக்கிழமை முன்னேடுத்தனர்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கிராம், 2 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் என 8 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் இன்றிரவு முற்படுத்தப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.