கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமையய இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதுல் கோட்டை, புறக்கோட்டை, பத்தேகம, ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இதன்போது, ...

மேலும்..

சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி

இலங்கையில் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதன் மூலம், ஜனநாயக மயமாக்கலை தக்கவைக்கும் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் 47,019 அமெரிக்க டொலர்களை ஜப்பான் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு முன்னணி ...

மேலும்..

கதிர்காமத்தில் 17 வருடங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட அன்னதானம்

கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் கடந்த 17 வருடகாலமாக ...

மேலும்..

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியல் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக நேற்று குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்குள்ள பற்றையில் காணப்பட்ட பொதியை சோதனையிடுவதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்- ஆர்னோல்ட்

தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “எமது ...

மேலும்..

’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம்

’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் ...

மேலும்..

மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்திசெய்ய நடவடிக்கை- மஹிந்த

மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது மஹரகம நகரம் ஆடைகள் தொடர்பான தொழிற்சாலைக்காக பிரபலமடைந்துள்ளது எனவும் இதனால் பிரதேசத்தின் வசதிகளை அதிகரித்து தேசிய, சர்வதேச மக்களுக்கு அவசியமான ...

மேலும்..

சஜித்தைப்போன்று வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் கூறுபவர் நான் அல்ல – மஹிந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போன்று தான் வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் கூறும் தலைவரல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் ...

மேலும்..

பாதாள உலகக் குழு உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை? – விசாரணை ஆரம்பம்!

இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது. அங்கொட லொக்காவுடன் இந்தியாவில் வசித்துவந்த முல்லேரியா ரஹ்மான் என்பவரின் மனைவி அங்கொட லொக்காவின் உணவில் விசத்தை கலந்ததாகவும் அந்த உணவை உட்கொண்டமையினால் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு இன்று ...

மேலும்..

யாழ். ஆயர் மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், யாழ். ஆயரை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்களே யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர். இந்த ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தோல்வி- கருணாகரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்கு என்பது பீரங்கி குண்டை விட சக்திவாய்ந்தது எனவும் யாருக்கும் தெரியாமல் இடுகின்ற புள்ளடியினால் ...

மேலும்..

சம்பந்தரைச் சந்தித்தனர் ஜனநாயகப் போராளிகள்!

னநாயகப் போராளிகள் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு இணந்துள்ள தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடனான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன், ...

மேலும்..

உரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்

உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடிபணிந்து அபிவிருத்தி என்பது எம்மிடம் செல்லாது. உரிமையுடனான அபிவிருத்தி எனின் அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய ...

மேலும்..