சிறப்புச் செய்திகள்

இலங்கை சமூகப் பொலிஸ் குழுக்களை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் கனடாவின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா உறுதி

இலங்கையின் சமூக பொலிஸ் குழுக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடாவின் பீல் பிராந்தியத்தின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்தியபொலிஸ் பிரதானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து விசேட ...

மேலும்..

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் ஹோட்டல் கொழும்பு-தெஹிவளை பகுதியில் அகற்றப்பட்டது

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச்  சொந்தமான கொழும்பு  தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று  சட்டவிரோதமான  முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாரால் திங்கட்கிழமை அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் ...

மேலும்..

கிழக்கு மாகாண வளர்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.48 ஆயிரத்து 223 மில்லியன் நிதி ஒதுக்கீடு ஆவணத்தில் கைச்சாத்திட்டார் கிழக்கு ஆளுநர்

2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் திங்கட்கிழமை கையொப்பமிட்டார். இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக ...

மேலும்..

வெள்ளம் பாதித்த வன்னி மக்களுக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உதவி!

  லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் துரித முயற்சியால் சர்வதேச லயன்ஸ் கழக எல்.சி.ஐ.எவ். நிதியத்திடம் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (32 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா) ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காயில் பதிவு!

காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் துணுக்காய், ஐயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதிகளிலிருந்து  வருகை தந்து, சாட்சியமளித்து ஆவணங்களை ...

மேலும்..

காற்றாலையும் கனிய மணல் அகழ்வும் மன்னார் மாவட்டத்தை சீர்குலைக்கிறது பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் - மன்னார் ...

மேலும்..

வரித் திருத்தம் பொருளாதார மறுசீரமைப்பு இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது! ஹர்ஷ டி சில்வா கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழு உறுப்பினர் என்பதற்காக  பொய் கூறி மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. வரி திருத்தங்கள் இன்றியோ, பொருளாதார மறுசீரமைப்புக்கள் இன்றியோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் முற்றாக ...

மேலும்..

மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் கௌரவிப்பு!

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால், ”மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்  சுகாதாரப்  பணியாளர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது. வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை பிராந்திய ...

மேலும்..

பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் ...

மேலும்..

நாட்டைப் பிளவுபடுத்த ஒரு போதும் இடமளியோம் ; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணையவேண்டும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம். எமது பயணத்தில் ...

மேலும்..

நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை தப்பிச்சென்ரோரிடம் ஒப்படைக்கார்! மஹிந்த சாட்டை

நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே காணப்பட்டன எனவும் மஹிந்த ...

மேலும்..

வாளுடன் ஒருவர் புத்தூரில் கைது!

புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், செவ்வாய்க்கிழமை இரவு காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்! ஜனகரத்நாயக்க அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவேன் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள்  தலைவர் ஜனக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மே மாதம் நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜானகரத்நாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதை உறுதி செய்துள்ளார். சனிக்கிழமை மின்துண்டிப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் நாடாளுமன்று விஜயம்! சுமந்திரன் எம்.பியின் ஒழுங்கமைப்பில்

  கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட்டனர். பாடத்திட்டத்தில் முக்கிய விடயமாக இருக்கும் மாணவர் நாடாளுமன்றம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் மிகவு‌ம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாடசாலை மாணவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..