இலங்கை செய்திகள்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ...

மேலும்..

அங்கஜனுக்கு உடனே நடவடிக்கை எடுக்குக! தேர்தல் ஆணைக்குழுவில் குணாளன் முறைப்பாடு

சிறிலங்கா சுத்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படுகின்றார். அவரது அலுவலகத்தில்  அவரது படமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் என்னால் முறையிடப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதமை ...

மேலும்..

இலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு!

வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் ...

மேலும்..

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ...

மேலும்..

சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் தாயாருக்கு வீடு வழங்கி வைப்பு …

வவுனியா சிறையச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபன் அவர்களின் தாயாருக்கு இன்று வீடு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிறை காவலர்களின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 2012 ...

மேலும்..

அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம்…

அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள்  என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக ...

மேலும்..

கோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை இன்றையதினம் ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து  நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று

வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட ...

மேலும்..

நவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்

நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள ...

மேலும்..

சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கோள் மண்டல பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார். கோள் மண்டல ...

மேலும்..

தமிழர் பிரிந்து நிற்பதால் சிதையும் பிரதிநிதித்துவம்! என்கிறார் சி.வி.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். நாட்டை வந்தடைந்த அனைத்து இலங்கையர்களும் கட்டுநாயக்க, சர்வதேச விமான ...

மேலும்..

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக மற்றுமொருவர் கைது!

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்றிரவு படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். இதன்போது, இரத்தினசிங்கம் கமலகரன் (வயது-40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் குறித்து ...

மேலும்..